இலங்கை

பிரபல சட்டத்தரணியின் மகனை காணவில்லை-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட மூத்த சட்டத்தரணியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜே எம்.லாஹீர் என்பவரின் மகனை காணவில்லை என திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ கோணேஸ்வர இந்து கல்லூரியில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவன் முக்சித் என்பவர் 26/01/2026 திங்கட்கிழமை காலை 7.00 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

அவருடைய துவிச்சக்கர வண்டி புத்தகப் பை என்பன இந்து கல்லூரியின் மைதானத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரிந்தவர்கள் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

ஜே.எம். லாஹீர் – 0770040984

இதேவேளை காணாமல் போனது தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!