ஐரோப்பா

பிரித்தானிய காவல் துறையில் பெரும் சீர்திருத்தங்களை அறிவித்த மஹ்மூத்! அதிகாரிகள் குறைய வாய்ப்பு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவல் துறையில் பெரும் சீர்திருத்தங்களை உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்  (Shabana Mahmood) நேற்று அறிவித்துள்ளார்.

இதில் AI மற்றும் நேரடி முக அங்கீகார தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்க £140 மில்லியன் முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சீர்த்திருத்தங்களில், CCTV பகுப்பாய்வு,  டிஜிட்டல் தடயவியல் மற்றும் நிர்வாக கடமைகள் போன்ற பணிகளுக்கு AI ஐப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் காவல் நேரங்கள் குறையும் என்றும் இது கணிசமாக 3000 அதிகாரிகள் பணியில் இருப்பதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேடப்படும் குற்றவாளிகளைப் பிடிக்க நாடு தழுவிய படைகளால் பயன்படுத்தப்படும் நேரடி முக அங்கீகார வேன்களின் எண்ணிக்கை 10 முதல் 50 வரை ஐந்து மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய குற்றவியல் நிறுவனம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு காவல் போன்ற தற்போதைய தேசிய நிறுவனங்களை ஒரே தேசிய காவல் ஆணையரின் கீழ் இணைத்து, நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறைத் தலைவர்கள் சீர்திருத்தங்களை காலதாமதமான திருத்தங்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சிலர் குறைந்து வரும் அதிகாரிகள் தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!