ஆஸ்திரேலியா செய்தி

எவ்வித பாதுகாப்பும் இன்றி 508 மீற்றர் உயர கோபுரத்தில் ஏறி அலெக்ஸ் ஹோனால்ட் சாதனை 

உலகின் மிகச்சிறந்த ‘ப்ரீ சோலோ’ (Free Solo) மலையேற்ற வீரரான அலெக்ஸ் ஹோனால்ட் (Alex Honnold), தாய்வானின் தலைநகரில் அமைந்துள்ள 508 மீற்றர் உயரமான ‘தாய்ப்பே 101’ கோபுரத்தை எவ்வித கயிறுகளோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ இன்றி ஏறி உலகை வியக்க வைத்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மக்களின் உற்சாகக் குரல்களுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பயணத்தை ஆரம்பித்த அவர், கட்டிடத்தின் வெளிப்புற உலோகத் தூண்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வெறும் கைகளால் உச்சியை அடைந்தார். மழை காரணமாக ஒரு நாள் தாமதமாகத் தொடங்கிய இந்த சாகசம், நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

“காற்று பலமாக வீசியதால் சமநிலையைப் பேணுவது சவாலாக இருந்தது” எனத் தெரிவித்த ஹோனால்ட், தனது இந்தச் சாதனை மக்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உந்துதலாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு பிரெஞ்சு வீரர் அலைன் ரொபர்ட் இக்கட்டிடத்தில் ஏறினாலும், கயிறுகள் இன்றி ஏறிய முதல் வீரர் ஹோனால்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!