ஐரோப்பா

உக்ரைனில் ட்ரோன் மழை பொழிந்த ரஷ்யா – அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தாக்குதல்!

உக்ரைனின் இரண்டு பெரிய நகரங்களான கீவ் மற்றும் கார்கிவ் ஆகியவை மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபுதாபியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற சிலமணி நேரங்களில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ரஷ்யா தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் ரஷ்யா டொன்பாஸ் பகுதியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. டொன்பாஸ் பகுதியை விட்டுக்கொடுத்தால் மட்டுமே சமரசம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!