இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா உதவும்: தூதுவர் உறுதி!

“ டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும்.”

இவ்வாறு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் Qi Zhenhong உறுதியளித்துள்ளார்.

கண்டிக்கு நேற்று (23) பயணம் மேற்கொண்ட சீனத் தூதுவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

“ இலங்கையும், சீனாவும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும். எனவே, இலங்கைக்கு உதவி வேண்டியது சீனாவின் கடமையாகும்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடையை சீனா வழங்கியுள்ளது. இவ்வாறு கல்வித்துறைக்கு உதவுவதற்கு சீனா தயாராகவே இருக்கின்றது.

இலங்கை மீண்டெழுவதற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் சீனா வழங்கும்.” எனவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

அதேவேளை, மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பஸ்களையும் இலங்கைக்கு சீனா விரைவில் வழங்கவுள்ளது என சீனத் தூதுவர் கி சென்ஹொங் மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!