ஐரோப்பா

மின் கட்டமைப்பை குறிவைத்து தாக்கும் ரஷ்யா : குளிரில் தவிக்கும் மக்கள்!

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலால் உக்ரைனின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் கீவில் சுமார் 3,000 அடுக்குமாடி கட்டிடங்கள் வெப்பமாக்கப்படாமல் உள்ளதாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff) இன்று மொஸ்கோவிற்கு பயணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஷ்யா “பால்டிக் கடலின் கடலுக்கடியில் உள்ள உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் குளிரான வானிலை நிலவுகிறது. இந்நிலையில் உக்ரைனின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் குளிரில் அவதியுற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!