இந்தியா பொழுதுபோக்கு

“புதுப் படங்களுக்கு வழிவிடுங்கள்” – தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்குப் பணிந்த கலைப்புலி எஸ். தாணு!

MeI

தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ சென்சார் சிக்கலால் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிப்போனது. இதனால் ரசிகர்களை உற்சாகப்படுத்த, கலைப்புலி எஸ். தாணு தனது தயாரிப்பில் உருவான பிளாக்பூஸ்டர் ஹிட் படமான ‘தெறி’ திரைப்படத்தை ஜனவரி 15 (பொங்கல் அன்று) மீண்டும் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அந்த ரீ-ரிலீஸும் ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பொங்கலுக்குப் போட்டியாகத் திரையரங்குகளில் வெளியாகும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ மற்றும் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ ஆகிய புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் தாணுவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர். ‘தெறி’ போன்ற ஒரு மாஸ் படம் ரீ-ரிலீஸ் ஆனால் தங்களின் புதிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் சக தயாரிப்பாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, “புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால், ‘தெறி’ ரீ-ரிலீஸைத் தள்ளிவைக்கிறோம்” எனத் தாணு தனது ‘X’ (Twitter) தளத்தில் தெரிவித்துள்ளார்.

‘தெறி’ திரைப்படம் பெரும்பாலும் ‘ஜனநாயகன்’ திரைக்கு வந்த பிறகே மீண்டும் வெளியாகும் எனத் தெரிகிறது.

Tweet

AJ

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!