இலங்கை செய்தி

இலங்கைக்கு அமெரிக்கா மேலும் 2 மில்லியன் டொலர் உதவி

டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவுவதற்காக மேலும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இன்று (ஜனவரி 13, 2026) அறிவித்துள்ளது.

இதன் மூலம் இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்கா வழங்கியுள்ள மொத்த மனிதாபிமான உதவித் தொகை 4 மில்லியன் டொலர்களாக (சுமார் 1.2 பில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது.

இந்த நிதி உதவியானது அம்பாறை, பதுளை, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் தோட்டப் பகுதிகளிலும் உள்ள மக்களின் உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் ‘வேர்ல்ட் விஷன்’ (World Vision) ஆகிய நிறுவனங்கள் ஊடாக இந்த நிவாரணங்கள் நேரடியாக வழங்கப்படவுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும், வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் இந்த நிதி பங்களிக்கும் எனத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!