ஐரோப்பா

“புராஜெக்ட் நைட்ஃபால்” : உக்ரைனுக்காக புதிய ஏவுகணைகளை தயாரிக்கும் பிரித்தானியா!

உக்ரைனுக்கு வழங்க புதிய தந்திரோபாய பால்ஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஏவுகணைகளுக்கு “புராஜெக்ட் நைட்ஃபால்” (Project Nightfall) என பெயரிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி  (John Healey) கூறினார்.

புதிய ஏவுகணைகள்  200 கிலோ எடையும் 500 கி.மீ தூரமும் செல்லும் திறன் கொண்டவை எனக் கூறப்படுகிறது.  அவை ரஷ்ய எல்லைக்குள் ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு உக்ரைனில் ரஷ்யா  ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!