ஆஸ்திரேலியா உலகம் செய்தி

விக்டோரியாவில் கோரத் தாண்டவமாடும் காட்டுத்தீ: ‘உடனடியாக வெளியேறுங்கள்’ என மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள அப்பர் முர்ரே (Upper Murray) பகுதியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மவுண்ட் லாசன் (Mt Lawson) தேசியப் பூங்கா அருகே சுமார் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தத் தீ, தற்போது அதிவேகமாக குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

குறிப்பாக பங்கில், கிரானியா மற்றும் தோலோகோலாங் பகுதி மக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ‘விக் எமர்ஜென்சி’ (VicEmergency) வலியுறுத்தியுள்ளது.

தீயின் தீவிரம் அதிகரித்து வருவதால், வெளியேற மறுப்பவர்களுக்கு அவசர உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வால்வா பகுதியில் ஒரு கேரவன் தீக்கிரையாகியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்படவுள்ள வானிலை மாற்றங்கள் தீயை மேலும் விசிறிவிடக்கூடும் என்பதால் தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!