இலங்கை செய்தி

கிறிஸ்துமஸ் – கைதிகளுக்கு பார்வையாளர்கள் உணவு  கொண்டு வர  விசேட ஏற்பாடு

கிறிஸ்மஸ் தினமான இன்று (25) சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்புகளை பார்வையாளர்கள் கொண்டு செல்ல சிறை அதிகாரிகள் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மத விழாவைக் கொண்டாடுவதற்கும் கைதிகளின் மன உறுதியை அதிகரிப்பதற்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“இந்த ஏற்பாட்டின் கீழ், தற்போதுள்ள சிறை விதிமுறைகளின்படி, பார்வையாளர்கள் ஒரு கைதிக்கு போதுமான உணவு அல்லது இனிப்புகளை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடனும் நலம் விரும்பிகளுடனும் கிறிஸ்மஸ் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முடியும்”என்று அவர் மேலும் கூறினார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!