அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டிருந்தன. நிமல் சிறிபாலடி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு என பிரிந்து செயல்பட்டுவந்தனர்.

இந்நிலையில் நிமல் சிறிபாலடி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்துள்ளன. இதனையடுத்தே விஜயதாச ராஜபக்சவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டது.

எனினும், தான்தான் கட்சியின் சட்டப்பூர்வமான செயலாளர் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுவருகின்றார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட நியமனத்தையும் சவாலுக்குட்படுத்தியுள்ளார்.

இந்நிலையிலேயே தலைமைப்பதவியில் மாற்றத்தை வலியுறுத்தியுள்ளார் தயாசிறி ஜயசேகர.

“ கிராமிய மட்டத்தில் சுதந்திரக்கட்சி விழுந்துள்ளது. தலைமைத்துவ மாற்றம் இன்றி அதனை கட்டியெழுப்ப முடியாது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை தனக்கு வழங்குமாறும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

தவிசாளர் பதவியை நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு வழங்க முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!