உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் அவர்களின் கை துண்டிக்கப்படும்!

ஹமாஸ் தலைவர் ரேத் சாத்தை (Raed Saad) படுகொலை செய்ய உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலியப் படைகள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தி, ஐடிஎஃப் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தாலும், அவர்களின் கை காசாவிலும் மற்ற எல்லா இடங்களிலும் துண்டிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் அனைத்து குடிமக்களின் சார்பாக,  காயமடைந்த போராளிகள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் அமுலில் இருக்கும் நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இது பலவீனமான சமாதான ஒப்பந்தத்தை பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!