இலங்கை செய்தி

சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக உயர்வு.

சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த பேரிடரினால் மேலும் 211 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக, 4 இலட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்புக்குள்ளானவர்களில், 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் 847 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 5,713 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!