16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதம்!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 16 ஆயிரம் கால்நடை பண்ணைகள் சேதமடைந்துள்ளன என்று கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றுள் கோழி பண்ணைகளே அதிகம் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சேதமடைந்துள்ள பண்ணைகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, பெருமளவான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.





