சீனாவில் லஞ்சம் வாங்கிய முன்னாள் வங்கியாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவில்(China) அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உயர் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிக்கு ஊழல் குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனா ஹுவாரோங்(Huarong) இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸின்(CHIH) முன்னாள் பொது மேலாளர் பாய் தியான்ஹுய்(Bai Tianhui), 2014 மற்றும் 2018 க்கு இடையில் $156 மில்லியனுக்கும் அதிகமாகப் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும், பாய் தியான்ஹுய் தனது செல்வாக்கு மிக்க பதவியை மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தி, அதற்கு பதிலாக பெரும் தொகைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உச்ச மக்கள் நீதிமன்றம், மறுஆய்வுக்குப் பிறகு தீர்ப்பை உறுதி செய்து, பாயின் குற்றங்கள் மிகவும் தீவிரமானவை என்று தெரிவித்துள்ளது.





