ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் குழந்தை உட்பட 38 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்

முன்னாள் பிரித்தானிய(Britain) மருத்துவர் ஒருவர், 13 வயதுக்குட்பட்ட குழந்தை உட்பட அவரது பராமரிப்பில் இருந்த 38 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

38 வயதான நதானியேல் ஸ்பென்சர்(Nathaniel Spencer), மத்திய பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றியபோது நோயாளிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக பிராந்திய வழக்கறிஞர் பென் சாம்பிள்ஸ்(Ben Samples) தெரிவித்துள்ளார்.

ஸ்பென்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2017 மற்றும் 2021க்கு இடையில் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட்(Stoke-on-Trent) மற்றும் டட்லியில்(Dudley) உள்ள இரண்டு பிராந்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனில் ஜூனியர் மருத்துவராக முன்னர் அறியப்பட்ட ஸ்பென்சர், 15 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளையும், 17 ஊடுருவல் தாக்குதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

ஸ்பென்சர் ஜனவரி 20 திகதி தனது முதல் நீதிமன்ற விசாரணைக்காக வடக்கு ஸ்டாஃபோர்ட்ஷையர்(Staffordshire) நீதி மையத்தில் ஆஜராக உள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!