நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வெளியாகிய அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக பதிவாகியிருந்தது.
எனினும் அந்த எண்ணிக்கை தற்போது 618ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 583,030 குடும்பங்களைச் சேர்ந்த 2,078,436 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 29,874 குடும்பங்களைச் சேர்ந்த 100,124 பேர் 990 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
4,071 வீடுகள் முழுமையாகவும், 71,121 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.





