இந்தியா செய்தி

மது வாங்க பணம் தர மறுத்த தாயை தீ வைத்து எரித்த ஒடிசா நபர்

ஒடிசாவின்(Odisha) பத்ரக்(Bhadrak) மாவட்டத்தில் ஒரு வயதான பெண் தனது மகனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனையாளர் என்று அறியப்பட்ட 45 வயது தேபாஷிஷ் நாயக்(Debashish Nayak), தனது தாயை தீ வைத்து எரித்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேபாஷிஷ் தனது 65 வயது தாயார் ஜோத்ஸ்நாராணி நாயக்(Jyotsnarani Nayak) அவர்களிடம் மதுபானம் வாங்க பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் அவர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர் மயங்கி விழுந்த பிறகு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்திற்கு பிறகு குறித்த பெண் முதலில் பத்ரக் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் பின்னர் அவரது நிலை மோசமடைந்த பிறகு கட்டாக்கில்(Cuttack) உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!