இலங்கை செய்தி

முல்லைத்தீவில் காணாமல் போன ஐந்து கடற்படை வீரர்களில் ஒருவரின் உடல் மீட்பு

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதியில் வெள்ள நிவாரண பணியின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழைக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கையின் போது சாலையை அகலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​நவம்பர் 30ம் திகதி ஐந்து கடற்படை வீரர்களும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

விரிவான தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, காணாமல் போன கடற்படை வீரர்களில் ஒருவரின் உடல் புதுமாத்தளன்(Puthumathalan) கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத்(Buddhika Sampath) தெரிவித்துள்ளார்.

இறந்தவர் தம்புள்ளையைச்(Dambulla) சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காணாமல் போன மீதமுள்ள நான்கு கடற்படை வீரர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புத்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!