நிலுவை பணம் சுழற்சி முறையில் அறவிடப்படும்: மின்சார சபை
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board – CEB) பொது முகாமையாளர் ஷெர்லி குமார (Shirley Kumara) தெரிவித்துள்ளார்.
பேரிடறால் பாதிக்கப்படட பகுதிகளில் உள்ள மக்கள் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தாலும், அதற்காக மின்சாரம் துண்டிக்கப்படாது என்று அவர் உறுதி அளித்தார்.
நிலுவையில் உள்ள தொகைகள் அனைத்தும் எதிர்காலக் கட்டண சுழற்சிகளில் (future billing cycles) சேர்க்கப்படும் என்றும், இந்தச் சமயத்தில் எந்தவிதமான துண்டிப்புகளும் மேற்கொள்ளப்படாது என்றும் அவர் கூறினார்.
தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மீட்டர் அளவீடு (meter reading) மற்றும் பில் விநியோகம் செய்வது சாத்தியமற்றதாக உள்ளது.
இதன் விளைவாக, இந்தப் பகுதிகளுக்கான மின்சார பில்கள் வரும் மாதங்களில் மட்டுமே வழங்கப்படும் என்று குமார தெரிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக மின்சார சபையே குறிப்பிடத்தக்க இழப்புகளை (significant losses) சந்தித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இழப்புகள் தொடர்பான மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




