இலங்கை செய்தி

நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுர இடையே தொலைபேசி உரையாடல்

நாட்டில் நிலவும் பேரிடர் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடலில் தித்வா(Ditwah) சூறாவளியை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு இந்திய மக்கள் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் நிற்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் உதவிக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி திசாநாயக்க, மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குவதையும் ஜனாதிபதி திசாநாயக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!