செய்தி

புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு – மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி

Maaveerar, மாவீரர்கள், Great Heroes, Tributes, Anjali, அஞ்சலி, Remembrance, Respect
தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று (27.11.2025) புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
காலை வேளையில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர் த. நவநீதன் தலைமையில் நகரின் பொது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, பூ தூவி அஞ்சலியினை செலுத்தினர். இதனுடன், வர்த்தக சங்க உறுப்பினர்கள்,  வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலர் இணைந்து மாவீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர்.
வருடந்தோறும் வழமையாக நடைபெறும் இந்த அஞ்சலி நிகழ்வு, இவ்வாண்டும் மிகுந்த உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hqxd1

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!