பிட் புல்(pit bull) நாய்களால் கொல்லப்பட்ட 23 வயது அமெரிக்க மாணவி
டெக்சாஸ்(Texas) பல்கலைக்கழகத்தின் மாணவியான 23 வயது மேடிசன் ரிலே ஹல்(Madison Riley Hull), டெக்சாஸின் டைலரில்(Tyler) உள்ள அவரது வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட மூன்று பிட் புல்(pit bull) நாய்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 21 அன்று அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் மேடிசன் ரிலே ஹல் இறந்து கிடந்ததை கண்டுள்ளனர். பின்னர் பிட் புல்களில் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது, மற்ற இரண்டு நாய்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
“மேடிசன் ரிலே ஹல் ஒரு அனுபவம் வாய்ந்த நாய் பராமரிப்பாளர் மற்றும் தீவிர விலங்கு பிரியர்” என்று ரிலேயின் தாயார் ஜெனிஃபர் ஹப்பல் குறிப்பிட்டுள்ளார்.





