அரசியல் இலங்கை

இலங்கையில் பிராந்திய ராஜ்ஜியம் கிடையாது! 

இலங்கையில் எந்த இடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை தொல்பொருள் திணைக்களத்துக்கு உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஒருசிலர் தமக்கு தமக்கு பிராந்திய ராஜ்ஜியம் இருப்பதாக நினைத்து , தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முற்படுகின்றனர்.

இதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தொல்பொருள் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“ தொல்பொருள் திணைக்களத்தால் வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்ட தொல்பொருள் பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கபட்டிருந்த பெயர் பலகைகள் ஒருசில தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் , குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. வடக்கு , கிழக்கு , மேற்கு மற்றும் தெற்கு என்று மாகாண அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது.

தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளை அகற்றி இனவாதத்தை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் .

இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் கூறினார்.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!