இலங்கை

இன்று ஆரம்பம் மட்டுமே: நாடு முழுவதும் 1000 கூட்டங்கள் நடத்த ஏற்பாடு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமரின் ஆரம்பமே இன்று நடைபெறும் நுகேகொடை கூட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டது. அதேபோல நாட்டு மக்கள் பரிதவிக்கும்போது எம்.பிக்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

“ எத்தடை வரினும் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். இது ஆரம்பம் மட்டும்தான், நாடு முழுவதும் ஆயிரம் கூட்டங்கள் நடத்தப்படும்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

“ மொட்டு கட்சியுடன் மேடையேறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வெட்கப்படவில்லை. ஏனெனில் இது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.” எனவும் அவர் மேலும் கூறினார்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!