இலங்கை செய்தி

இலங்கையில் ஆண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் ஆண்கள் மத்தியில் உயிர்மாய்ப்பு விகிதங்கள் உலக சராசரியை விட மிக அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

ஆண்களின் மத்தியில் அதிகரித்துள்ள மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆகியவையே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்கள் உயிர்மாய்ப்பு விகிதம், ஒரு இலட்சம் ஆண்களுக்கு 27 பேராக கணக்கிடப்பட்டுள்ளது.

பெண்கள் உயிர்மாய்ப்பு விகிதம் ஒரு இலட்சம் பெண்களுக்கு 5 பேராக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விகிதமானது வயதிற்கு ஏற்ப அதிகரிக்கிறது. குறிப்பாக 55 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடமும் மற்றும் இளம் பெண்களில் 17–25 வயதுக்குட்பட்ட பெண்களிடமும் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளவில் ஒவ்வொரு 100 மரணங்களில் ஒன்று உயிர்மாய்ப்புக் காரணமாக நிகழ்கிறது எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!