இலங்கை

திருமலை சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்!

திருகோணமலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் லாபம் தேடுவதற்கு சில குழுக்கள் முற்படலாம். அவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,  “ சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குரிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. அதற்கமைய அவர்கள் செயற்படுவார்கள்.

எமது நாட்டில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டதால் பாரிய குழப்பங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் உள்ளன. எனவேதான், புத்தர் சிலை அங்கிருந்து அறக்கப்பட்டது. பின்னர் மீள வைக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே பொலிஸார் தலையிட்டனர்.

திருகோணமலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு தமது அரசியல் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, மக்களை திரட்டுவதற்கு சில குழுக்கள் முற்படலாம். அவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது.” என்றார்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!