இலங்கை

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியன்று நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு மேலும் தெரிவிக்கிறது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதே வேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!