ஐரோப்பா செய்தி

வேலைநேரம் 13 மணித்தியாலம் – சர்சைக்குரிய சட்டத்தை இயற்றிய கிரேக்கம்!

கிரேக்க அரசாங்கம் தனியார் துறை ஊழியர்கள் ஒரு நாளைக்கு 13 மணித்தியாலம் பணிப்புரிவதற்கான சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றியுள்ளது.

ஆனால் விமர்சகர்கள் அதன் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வேலை நேர உத்தரவுக்கு இணங்குவதாகவும், நீண்ட நேரம் வேலை செய்தாலும், குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றின் தரவுகளின்படி, முழுநேர ஊழியர்கள் ஆண்டுக்கு சுமார் 1,900 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இது இங்கிலாந்தில் 1,510 மணிநேரமும் ஜெர்மனியில் 1,330 மணிநேரமும் ஆகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கிரேக்க தொழிலாளர் நிறுவனம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், 94% தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பு இல்லாமல் குறுகிய வேலை நேரத்தை ஆதரிப்பதாகவும், கிட்டத்தட்ட 60% பேர் 13 மணி நேர நாளை முற்றிலும் நிராகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கிரேக்க தொழிலாளர்கள் பல போராட்டங்களை தொடர்ந்து 1936 ஆம் ஆண்டு  எட்டு மணி நேர வேலை நாளை பெற்றனர். தற்போதைய சட்டம் இந்த வெற்றியை புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

(Visited 4 times, 5 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!