இலங்கை

மீண்டும் நெருக்கடி அபாயம்! – அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்து விமல் எச்சரிக்கை

அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பொறுப்பேற்கும்போது அந்நிய செலாவணி கையிருப்பு 6 பில்லியனுக்கு அண்மித்தாகவே இருந்தது. தற்போதும் அதே அளவுதான் உள்ளது. எனினும், 2027 ஆம் ஆண்டாகும்போது இந்த எண்ணிக்கை 15 பில்லியனாக வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை முன்வைத்துள்ளது.

இந்த இலக்கை நோக்கி அரசாங்கம் எவ்வாறு நகரும்? சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி இருக்க முடியாது. உரிய வேலைத்திட்டங்கள் அவசியம்.

2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டு கடன் செலுத்தலை மீள ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் கடன் செலுத்த முடியாத, வங்குரோத்து நிலை மீண்டும் ஏற்படக்கூடும்.” என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!