செய்தி விளையாட்டு

மழை காரணமாக ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான முதல் T20 போட்டி ரத்து

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், கடந்த வாரம் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்நிலையில், இன்று கான்பெர்ராவில்(Canberra) உள்ள மனுகா ஓவல்(Manuka Oval) மைதானத்தில் முதலாவது T20 போட்டி ஆரம்பமானது.

நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

அந்த வகையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 9.4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 97 ஓட்டங்கள் பெற்றுருந்த நிலையில் மழையால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து பல மணிநேர இடைவிடாது மழை காரணமாக நடுவர்களால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்(Shubman Gill) 37 ஓட்டங்களும் சூர்யகுமார் யாதவ்(Suryakumar Yadav) 39 ஓட்டங்களும் பெற்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!