இலங்கை

மாகாணசபைத் தேர்தலை குறிவைக்கும் பாதீடு! அநுர அரசாங்கம் போடும் திட்டம்

மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஓர் முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படமாட்டாதென தெரியவருகின்றது.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவு ஏற்பட்டுள்ளது.

இதனையும் ஒரு வாய்ப்பாக கருதி விரைவில் தேர்தலுக்கு செல்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக பாதீட்டு கூட்டத்தொடருக்கு மத்தியில் கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.

எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதென அறியமுடிகின்றது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்