மாகாணசபைத் தேர்தலை குறிவைக்கும் பாதீடு! அநுர அரசாங்கம் போடும் திட்டம்
மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஓர் முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படமாட்டாதென தெரியவருகின்றது.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவு ஏற்பட்டுள்ளது.
இதனையும் ஒரு வாய்ப்பாக கருதி விரைவில் தேர்தலுக்கு செல்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக பாதீட்டு கூட்டத்தொடருக்கு மத்தியில் கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.
எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதென அறியமுடிகின்றது.





