உலகம் செய்தி

கரீபியன் கடலில் மேலும் ஒரு படகை தாக்கிய அமெரிக்கா – ஆறு பேர் உயிரிழப்பு

கரீபியன் (Caribbean) கடலில் போதைப்பொருட்களுடன் பயணித்த மற்றொரு படகை அமெரிக்க இராணுவம் தாக்கியதாக பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த படகு ட்ரென் டி அரகுவா (Tren de Aragua) கும்பலால் இயக்கப்பட்டதாகவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலை தொடர்ந்து சமூக ஊடக பதிவில், “நீங்கள் ஒரு போதைப்பொருள் பயங்கரவாதியாக இருந்தால், நாங்கள் அல்-கொய்தாவை (al-Qaeda) நடத்துவது போலவே உங்களை நடத்துவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் நபர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் நடத்திய பத்தாவது தாக்குதல் இதுவாகும். இதுவரை மொத்தம் 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

போதைப்பொருளுடன் அமெரிக்கா நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல்!

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!