இலங்கை

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்கள் மீது பொலிஸார் கிடுக்கிப்பிடி! 8 பேர் மீது வழக்கு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயல்கள் மூலம் திடீர் பணக்காரர்களாக மாறிய நபர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் என பல பிரிவினரை இலக்கு வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வன்முறைகளில் ஈடுபடுதல், மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கி கடத்திச் சித்திரவதை செய்தல், போதை மாத்திரைகள் விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகள் மூலம் சொத்துச் சேர்த்த 8 பேர் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த எட்டு பேரில், ஒருவருக்கு எதிராகப் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டும், எஞ்சிய ஏழு பேருக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகள் மூலம் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட இந்த எட்டுப் பேரில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றிலும், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத முறையில் சொத்துச் சேர்த்தவர்கள் மற்றும் வன்முறைகளை ஒழுங்கமைத்தவர்கள் மீது எதிர்வரும் நாட்களில் சிறப்புப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலும் பல முறைப்பாடுகள் வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 12 times, 12 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்