இந்தியா

இரு தனித்தனி சோதனைகளில் 19 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைபொருளை பறிமுதல் செய்த மும்பை சுங்கத்துறையினர்

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து போதைப்பொருள் கடத்திச் செல்வதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கிலிருந்து மும்பை வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின்போது இரண்டு பயணிகளிடமிருந்து 7.864 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 7.86 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர் இருவரையும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் மற்றொரு சம்பவத்தில் பேங்காக்கிலிருந்து மும்பை சென்ற விமானத்தில் ஒரு பயணியிடமிருந்து ரூ.11.9 கோடி மதிப்பிலான 11.922 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 4 times, 4 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே