” இலங்கையர் தினம்” நிகழ்வுகளை நடத்தவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சர்வை

” இலங்கையர் தினம்” நிகழ்வுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை மைதானத்திலும், விகாரமாதேவி பூங்கா உள்ளிட்ட அப்பிரதேத்தை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்புடன் நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்ச்சித்திட்டம் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவுக் கலாச்சாங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை, புதிய உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, ‘இலங்கையர் தினம்’ நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.