இலங்கை

இலங்கையில் சற்று முன் இடம்பெற்ற கோர விபத்து – 12 பேர் படுகாயம்!

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் ஒன்பது சிறுவர்கள் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபுகஸ்கந்த பகுதியில் உள்ள ஒரு பாடசாலையைச் சேர்ந்த சாரணர் குழு படுவத்தே மகா வித்தியாலயத்தில் நடந்த  நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒரு தடுப்பணையில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும், பேருந்தின் பிரேக்குகள் வேலை செய்யாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 20 சிறுவர்கள் இருந்ததாகவும் அவர்களில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!