இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க ஆலோசகர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ் (Ashley J. Tellis) கைது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகருமான (South Asian foreign policy consultant) ஆஷ்லே ஜே டெல்லிஸ் (Ashley J. Tellis), இரகசிய தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, வர்ஜீனியாவின் (Virginia) கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டின் (Carnegie Endowment) மூத்த ஊழியரும், டாடா மூலோபாய விவகாரங்களுக்கான (Tata Strategic Affairs) தலைவருமான 64 வயதான டெல்லிஸ், தடைசெய்யப்பட்ட அரசாங்கப் பொருட்களைக் கையாள்வது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்ஜீனியாவின் வியன்னாவில் (Vienna) உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உயர் ரகசிய ஆவணங்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்து இருந்ததாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், டெல்லிஸுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $250,000 அபராதம் விதிக்கப்படும்.
இந்த புகார் ஒரு குற்றச்சாட்டு என்றும், குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை டெல்லிஸ் நிரபராதி என்று கருதப்படுவதாகவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.