இந்தியா

இருமல் மருந்து விவகாரம்; தயாரிப்பாளர் வளாகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தைக் குடித்ததால் 22 குழந்தைகள் உயிரிழந்தன. இதுகுறித்து மத்தியப் பிரதேச தனிப்படைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் ஃபார்மா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.

கொலை முயற்சியில்லாமல் மரணம் விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய இரு சட்டப் பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனை(75), சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ரங்கநாதனின் வீடு, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மருந்து நிறுவனத்தை முறையாக கண்காணிக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே