உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு – நம்பிக்கையை இழந்த ட்ரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கையை இழந்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளன.

இந்நிலையில், தங்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுமா என ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், வேறு எந்தத் தலைவரும் செய்யாத அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதும் தனக்கு நோபல் பரிசு வழங்காமல் இருப்பதற்கு பரிசு வழங்கும் குழுவினர் ஏதாவது காரணத்தைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு எந்த அடிப்படையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது எனவும் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

(Visited 44 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி