இலங்கை

இலங்கையில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் நினைவு நாளில் கணவரும் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் இருந்து பதுளைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவரும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் 7வது நினைவு நாள் அன்று சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்ததாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை, ரிதீபன, அப்லேண்ட் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரான 63 வயதுடைய தர்மசேன மற்றும் 52 வயதான ரஞ்சலி பிரணீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த வேன், மஹியங்கனையில் உள்ள கிராந்துருகோட்டே செல்லும் பிரதான வீதியில் விபத்திற்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் இருவர் பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் வேன் பலத்த சேதமடைந்தது. விபத்து நடந்த நேரத்தில் வேனில் 11 பேர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!