உலகம்

பிலிப்பைன்ஸில் உலுக்கிய நிலநடுக்கம் – 26 பேர் பலி – 147 பேர் படுகாயம்

மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

செபு நகர கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், மேலும் 147 பேர் காயமடைந்தாகவும் தெரியவந்துள்ளது.

நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட விசாயாஸ் பகுதியில் அமைந்துள்ள செபு நகரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறப்பு எண்ணிக்கை உயரும் என்றும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்