ஐரோப்பிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அனைத்து சிவிலியன் ட்ரோன்களுக்கு தடை செய்த டென்மார்க்
கோபன்ஹேகனில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களின் கூட்டத்தைப் பாதுகாக்கவும், சந்தேகத்திற்கிடமான ட்ரோன் காட்சிகள் அதிகரித்து வருவதால், காவல்துறை மீதான சுமையைக் குறைக்கும் விதமாக திங்கள் முதல் வெள்ளி வரை நாடு தழுவிய அனைத்து சிவிலியன் ட்ரோன் விமானங்களை தற்காலிகமாக தடை செய்வதாக டென்மார்க் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இத் தற்காலிகத் தடை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை நீடிக்கும், மேலும் அதிகாரிகள் உச்சிமாநாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வேளையில், சட்டப்பூர்வ விமானங்களுக்கும் மற்றும் சாத்தியமான விரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும் இந்த தடை அமையும் என்று போக்குவரத்து அமைச்சர் தாமஸ் டேனியல்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பணி ட்ரோன்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படலாம். தனியார் நிகழ்வுகளுக்கான வான்வழி புகைப்படம் எடுத்தல் போன்ற சாதாரண வணிக அல்லது பொழுதுபோக்கு விமானங்களுக்கு அனுமதி இருக்காது. இராணுவம், காவல்துறை மற்றும் பிற அவசர சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் . இவற்றை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று டென்மார்க் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் அக்டோபர் 1 ஆம் திகதி கோபன்ஹேகனில் கூடி ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரைனுக்கான ஆதரவை மையமாகக் கொண்ட ஒரு முறைசாரா கூட்டத்திற்கு வருவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில் டென்மார்க் விமான நிலையங்கள் மற்றும் இராணுவ வசதிகள் மீது ட்ரோன்கள் பறந்ததாக பல அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





