ஐரோப்பா

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதிக்கான மின்சாரம் துண்டிப்பு!

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதிக்கான வெளிப்புற மின்சாரம் மூன்று நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தப்படும் என்ற அச்சம் எழுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் தனது பிடியை வலுப்படுத்த புடின் ஒரு நெருக்கடியை உருவாக்க இலக்கு வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே “ரஷ்யா அணுமின் நிலையத்தை ஒரு பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்துகிறது” என்று உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 2022 இல் ரஷ்ய துருப்புக்கள் ஆலையின் கட்டுப்பாட்டைப் பெற்றன, அதன் உலைகள் சுமார் 4 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்