இந்தியா

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுடன் பயணித்த எலியால் பரபரப்பு!

கான்பூரிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், எலியொன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் இருந்த 140 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பயணம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.55 மணிக்கு கான்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானம் மாலை 06 மணியளவில் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கான்பூர் விமான நிலைய ஊடகப் பொறுப்பாளர் விவேக் சிங், விமானத்தில் ஒரு எலி இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த எலி கண்டுபிடிக்கப்பட்டு விமானத்திலிருந்து அகற்றப்பட்டதா என்பது விரிவாக  தெரியவில்லை.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே