ஐரோப்பா

காசா நகரில் நீடிக்கும் பதற்றம் – சுவிட்சர்லாந்து விடுத்த அழைப்பு

காசா நகரில் நீடிக்கும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்துள்ளது.

காசா நகரின் மையத்தில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பது ஏற்கனவே தாங்க முடியாத மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

இந்த நிலையில் நேற்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதற்றம் அதிகரிப்பது ஒரு தீர்வாகாது எனவும் சுவிட்சர்லாந்து போர் நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல், மனிதாபிமான உதவிகளுக்கான தடையற்ற அணுகல், சர்வதேச சட்டத்திற்கு இணங்குதல் மற்றும் இரு-மாநில தீர்வுக்கான நம்பகமான பாதை ஆகியவற்றைக் கோருகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு காசா நகரில் இஸ்ரேல் பாரிய தரைவழி தாக்குதலைத் தொடங்கிய பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!