பிரான்சில் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயம் ; தாக்குதல்தாரி கைது

தெற்கு பிரான்சின் ஆன்டிபஸ் நகரத்தில் உள்ள ஒரு தோட்டக்கலைப் பள்ளியில் ஒரு ஆசிரியரையும் ஒரு மாணவனையும் கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் இனி அச்சுறுத்தலாக இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்றும், ஆனால் அவரது நோக்கங்கள் குறித்து உடனடியாக எந்த விவரங்களையும் தெரிவிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
(Visited 2 times, 2 visits today)