கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமத்தை தாக்கிய ரஷ்யா – 23 பொதுமக்கள் பலி!

கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷ்ய விமானத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாரோவாவின் டொனெட்ஸ்க் குடியிருப்பில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்த சாதாரண மக்களே இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி கூறினார்.
அவசர சேவைகள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், கொல்லப்பட்டவர்களைப் போலவே பலர் காயமடைந்ததாகவும் டொனெட்ஸ்க் பிராந்தியத் தலைவர் வாடிம் ஃபிலாஷ்கின் தெரிவித்துள்ளார்.
யாரோவா பிராந்தியத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ஸ்லோவியன்ஸ்க்கின் வடக்கே உள்ளது, மேலும் ரஷ்யப் படைகள் கிழக்கில் மெதுவாக முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)