பாகிஸ்தானில் இடம்பெற்ற படகு விபத்து – 05 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாணத்தில் நடந்த படகு விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் படகு கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு கவிழ்ந்த போதிலும், அதில் இருந்த பலரை மீட்க நாட்டின் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாகிஸ்தானை பாதித்த வெள்ளம் நாட்டில் 4,100க்கும் மேற்பட்ட கிராமங்களை பாதித்துள்ளது, மேலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)